BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹுனுபிட்டிய அருகே தொடருந்து தடம் புரண்டு விபத்து

ஹுனுபிட்டிய அருகே தொடருந்து தடம் புரண்டு விபத்து
பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 3.25 மணிக்கு பொல்கஹாவெலவிலிருந்து புறப்பட்ட இந்தத் தொடருந்து, விபத்து நிகழ்ந்த நேரத்தில் களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.U. வூட்லர் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களில் பலத்த காயமடைந்த ஒரு பயணி மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"