BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரியான குழந்தையின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (Postpartum Depression/Psychosis) காரணமாக இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த போது வீட்டிலேயே இருந்த குழந்தையின் தந்தை (தொழில் நுட்பப் பொறியியலாளர்), திடீரெனக் கிணற்றுப் பகுதியில் சத்தம் கேட்டதையடுத்து அங்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது தனது மனைவியும் குழந்தையும் கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனைவி கிணற்றிலிருந்த குழாய் ஒன்றின் உதவியுடன் மேலே ஏறி உயிர் தப்பிய போதிலும், 19 நாள் சிசு நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"