உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் தனது தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 9 மாத பெண் குழந்தையை 12 வயதுடைய உறவினர் சிறுவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனைகளில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனின் கைப்பேசியில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையத் தேடல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிறுவர்களின் இணையப் பயன்பாடு, ஆபாச உள்ளடக்கங்களின் தாக்கம், பெற்றோர் கண்காணிப்பின் அவசியம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய அளவிலான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக