BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. முறைப்பாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக நம்பிக்கை அளித்து, ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர். மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடையவர் என்றும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"