பிரான்சின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான Pierre-Édouard Stérin, தனது 1.4 பில்லியன் யூரோ மதிப்புடைய சொத்துக்களை தனது ஐந்து பிள்ளைகளுக்கு வழங்காமல், முழுமையாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Smartbox Group நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Otium Capital முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டெரின், தனது செல்வத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கும் சுதந்திரம் தனக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்காக பிரான்சின் வாரிசுரிமை சட்டங்களில் மாற்றம் செய்யுமாறும் அவர் சட்டமியற்றுபவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பிரெஞ்சு சட்டத்தின் படி, ஒருவரின் சொத்தில் குறிப்பிடத்தக்க பகுதி அவருடைய பிள்ளைகளுக்கே கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், தனது முழு செல்வத்தையும் சமூக நலன் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்காக ஒதுக்க விரும்புவதாக ஸ்டெரின் செனட் விசாரணையொன்றில் தெரிவித்துள்ளார்.
2012 முதல் Belgium நாட்டில் வசித்து வரும் அவர், பிரான்சின் வரி அமைப்பு மற்றும் அரசியல் நிர்வாகத்தை பலமுறை விமர்சித்துள்ளதுடன், பொருளாதார ரீதியாக தாராளவாதமும் சமூக ரீதியாக பழமைவாதமும் கொண்ட கொள்கைகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்.
இந்த அறிவிப்பு, வாரிசுரிமை, குடும்பப் பொறுப்பு மற்றும் தனிநபரின் சொத்து உரிமை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சட்ட மாற்றம் ஏற்படுத்தப்பட்டால், அது France நாட்டின் பரம்பரை மற்றும் வாரிசுரிமை சட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் கருதுகின்றன.
ஸ்டெரினின் இந்த முடிவு, செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்குப் பதிலாக சமூக நலனுக்காக பயன்படுத்துவது குறித்து உலகளவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக