Sri Lankaவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் திடீரென அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Dollar மதிப்பில் ஏற்பட்ட உயர்வே இந்த விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், வெள்ளைப்பூண்டு மற்றும் இறக்குமதி அரிசி வகைகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில், ஒரு கிலோ பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 200 ரூபாயை நெருங்கியுள்ளது.
அதேநேரத்தில், காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், வெள்ளைப்பூண்டின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. பொன்னி அரிசி மற்றும் வெள்ளை பொன்னி அரிசி வகைகளின் மொத்த விலைகள் கடந்த சில நாட்களில் வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Sri Lanka Food Crisis பின்னணியில் ஏற்பட்டுள்ள இந்த புதிய விலை உயர்வு பொதுமக்களின் வாழ்வாதாரச் செலவை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக