Donald Trump, Iran தொடர்பான பதற்ற நிலை விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதனைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகம் தற்போது அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் எண்ணெய் விலை பெரியளவில் குறையக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக உயர்ந்து வந்த Crude Oil விலைகள் இனி சரிவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என கூறிய ட்ரம்ப், அமெரிக்காவும் ஈரானும் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறினால், பெரியளவிலான இராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க செனட் சபையில் ட்ரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினருடன் சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதேநேரத்தில், Qatar, Saudi Arabia மற்றும் United Arab Emirates தலைவர்கள், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், உலக சந்தைகளில் எண்ணெய் விலை மாற்றம், போர் அச்சம் மற்றும் மத்திய கிழக்கு அரசியல் நிலவரம் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக