Ministry of Health Sri Lanka வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, இலங்கையில் தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிரினி அலஹப்பெரும முக்கிய தகவல்களை வெளியிட்டார். தற்போது நாட்டில் சுமார் 2,500 பேர் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் 45 முதல் 60 குழந்தைகள் கடுமையான தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலசீமியா நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலசீமியா என்பது தொற்றுநோய் அல்ல; இது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணு வழியாக பரவும் நோயாகும். இதனால், திருமணத்திற்கு முன்பே இருவரும் பரிசோதனை மேற்கொள்வது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க உதவும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Batticaloa, குருநாகல், அனுராதபுரம் மற்றும் ராகம உள்ளிட்ட அதிக பாதிப்பு கொண்ட மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களை அடையாளம் காணும் விசேட பரிசோதனை திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், தலசீமியா நோயாளர்களுக்கு தேவையான குருதி மாற்றீடு, மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக Ministry of Health Sri Lanka தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக