BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

ஹேக்கர்களால் திருடப்பட்ட . மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம்

ஹேக்கர்களால் திருடப்பட்ட . மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம்

ஆசிய நாடு ஒன்றில் இணையவழி (சைபர்) குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் காவல்துறை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணத்தை ஓமான் வங்கியில் இருந்து உள்ளூர் நாணயமாக மாற்ற முயன்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதாகவும், இந்த நடவடிக்கை இன்டர்போல் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட பணம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இலங்கையில் அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலரும், அஞ்சல் துறையிலிருந்து 625,000 டொலரும் காணாமல் போனதாக வெளியான தகவல்களுடன் இதற்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது பல்வேறு தரப்பினரும் கவனமாக விசாரணை செய்து வருவதாகவும், ஆனால் இதுவரை இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலும் இதே அளவிலான பண இழப்பு சம்பவம் உறுதியாக பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"