BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

பேருந்து காதலால் தொடங்கிய மோசடி ; மந்திர இளநீரால் தாய் மகளை ஏமாற்றிய கும்பல்

பேருந்து காதலால் தொடங்கிய மோசடி ; மந்திர இளநீரால் தாய் மகளை ஏமாற்றிய கும்பல்

சீகிரியா பகுதியில் பேருந்து பயணத்தின் போது அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாக நம்ப வைத்து இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

தன்னை நல்ல குணமுள்ள நபராக காட்டிக்கொண்ட சந்தேகநபர், முதலில் யுவதியின் நம்பிக்கையைப் பெற்று அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். பின்னர் தனது தாய் மற்றும் சகோதரி என கூறி இரு பெண்களை தொலைபேசியில் பேச வைத்து போலியான குடும்ப சூழலை உருவாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மோசடி கும்பல், அதனை பயன்படுத்தி “கெகிராவ பகுதியில் சக்திவாய்ந்த சாமியார் ஒருவர் உள்ளார்; அவர் மந்திரித்து கொடுக்கும் இளநீரை அருந்தினால் நோய் குணமாகும்” என நம்ப வைத்துள்ளனர்.

இதன்பேரில் தாய் மற்றும் மகளை அழைத்துச் சென்ற கும்பல், இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"