BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

இலங்கையில் டீசல் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதாகப் பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தம்புள்ளை உள்ளிட்ட பிரதான பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாவிற்கும், தக்காளி 400 ரூபாவிற்கும், பாகற்காய் 420 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சில்லறை சந்தைகளில் போஞ்சி ஒரு கிலோ 650 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரக்கறிச் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அறுவடை குறைவடைந்து சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"