BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

நேரடி சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்: காலை முதல் மாலை மணி வரை எச்சரிக்கையாக இருக்க நிபுணர் அறிவுறுத்தல்!

நேரடி சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்: காலை முதல் மாலை மணி வரை எச்சரிக்கையாக இருக்க நிபுணர் அறிவுறுத்தல்!

நேரடி சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக முற்பகல் 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய கதிர்கள் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ள உரிய ஆடைகளை அணிவது அவசியமாகும். மெலனோமா மற்றும் மெலனோமா அற்ற என இரண்டு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதாகவும், இதில் மெலனோமா அற்ற புற்றுநோய் சூரிய ஒளியால் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் விளக்கினார். எனினும், இந்த வகைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும். அதேவேளை, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி-யைப் பெற்றுக்கொள்ள சூரிய ஒளி அவசியம் என்பதால், மிதமான வெயில் உடலில் படுவது ஆரோக்கியமானது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அளவுக்கு மிஞ்சிய கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உச்சகட்ட வெயில் நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"