BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு களப்பில் சடலங்களாக மீட்கப்பட்ட இருவர் அடையாளம்: நீதிவான் முன்னிலையில் விசாரணை தீவிரம்!

மட்டக்களப்பு களப்பில் சடலங்களாக மீட்கப்பட்ட இருவர் அடையாளம்: நீதிவான் முன்னிலையில் விசாரணை தீவிரம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் நேற்று (மே 07) மாலை மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் அரசடி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சொர்ணலிங்கம் குகேஸ் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். களப்பின் பாலத்திற்கு அருகில் சடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ஆகியோர் நேரில் வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். இவர்களது மரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் இரண்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"