BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் அதிர்ச்சி தொடர்கிறது! மேலும் பல என்புக்கூட்டுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் அதிர்ச்சி தொடர்கிறது! மேலும் பல என்புக்கூட்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் Jaffna பகுதியில் உள்ள Chemmani Mass Graves மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் மேலும் பல மனித என்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வின் 9ஆம் நாள் பணிகள் புதன்கிழமை நடைபெற்றபோது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து மூன்று என்புக்கூட்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, மேலும் ஒரு என்புக்கூடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் சில பகுதிகள் மயானத்தின் எரிமேடை கட்டுமானத்தின் கீழ் அமைந்துள்ளதால், அவற்றை பாதுகாப்பாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் அடுத்த கட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரை மொத்தமாக 256 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 252 என்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல ஆண்டுகளாக சர்ச்சையிலும் மனித உரிமை கவனத்திலும் இருந்து வரும் செம்மணி மனித புதைகுழி விவகாரம், மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதுடன், உண்மை மற்றும் நீதிக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"