BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

தையிட்டி 'பவானி வீதி' மீட்பு: தவிசாளருக்குப் பொலிஸார் எச்சரிக்கை - சட்டப் போராட்டத்திற்குச் தயார் எனப் பதில்!

தையிட்டி 'பவானி வீதி' மீட்பு: தவிசாளருக்குப் பொலிஸார் எச்சரிக்கை - சட்டப் போராட்டத்திற்குச் தயார் எனப் பதில்!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விகாரை வளாகத்திற்குள், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான 'பவானி வீதி' உள்வாங்கப்பட்டுள்ளமை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் வீதியை அடையாளப்படுத்திய தவிசாளர் சோ.சுகிர்தன், எதிர்வரும் மே 11-ஆம் திகதிக்குள் வீதியை விடுவிக்குமாறு விகாராதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். தவறும்பட்சத்தில் மே 12-ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விகாராதிபதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், தவிசாளர் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதன்போது, வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தவிசாளரை எச்சரித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள தவிசாளர், "இது சபைக்குச் சொந்தமான பொது வீதி; இதனை மீட்கும் முயற்சியில் பின்வாங்கப்போவதில்லை. பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை நீதிமன்றில் சந்திக்கத் தயார்" என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"