BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

பண்டாரகம ஆசிரியை மர்ம மரணம்: கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் களுத்துறை கடற்கரையில் சடலமாக மீட்பு!

பண்டாரகம ஆசிரியை மர்ம மரணம்: கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் களுத்துறை கடற்கரையில் சடலமாக மீட்பு!

பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிணக்கு காரணமாக இவர் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29-ஆம் திகதி இடம்பெற்ற தோழி ஒருவரின் திருமண நிகழ்வில் கணவர் கலந்துகொள்ளாதது மற்றும் 30-ஆம் திகதி கணவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.


நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என ஆசிரியை பலமுறை வற்புறுத்தியும், கணவர் அதனைப் புறக்கணித்துச் சென்றதால் கடும் ஆத்திரமடைந்த ஆசிரியை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்போது அவரைத் தடுப்பதற்காக மகனும், தாயாரும் பின்தொடர்ந்த போதிலும், அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக நள்ளிரவு 12.40 மணியளவில் மொரகஹேன பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில், மே 1-ஆம் திகதி களுத்துறை தெற்கு கடற்கரையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கணவர் மற்றும் தாயார் மூலம் மேற்கொள்ளப்பட்ட அடையாளப்படுத்தலில், இது காணாமல் போன ஆசிரியையே என்பது உறுதி செய்யப்பட்டது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"