BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மாயமான $. மில்லியன் அரச கடன்: நிதியமைச்சுக்கு ஒரு மாதக் கால அவகாசம் - நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

மாயமான $. மில்லியன் அரச கடன்: நிதியமைச்சுக்கு ஒரு மாதக் கால அவகாசம் - நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

இலங்கை திறைசேரியினால் அவுஸ்திரேலியாவிலுள்ள கடன் வழங்குநர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 பரிவர்த்தனைகள்) உரிய பெறுநரைச் சென்றடையாமல் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சின் அதிகாரிகள் நேற்று (30.04.2026) நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவின் (COPF) முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். திறைச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிதி விவகாரம் குறித்துப் பொது நிதி மீதான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா தெரிவிக்கையில், 2025 நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிவர்த்தனைகளில் பாரிய குறைபாடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜனவரி மாதத்திலேயே இது தொடர்பான அபாய அறிகுறிகள் தென்பட்ட போதிலும், மார்ச் மாதத்தில்தான் பணம் சென்றடையவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தாமதம் மற்றும் நாடாளுமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்காதது குறித்துக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மாயமான இந்த நிதி மீட்கப்படாவிட்டால், அந்தச் சுமை இறுதியில் வரி செலுத்தும் மக்கள் மீதே விழும் என அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"