BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

"அஜித் அப்படி கூறவில்லை": ' ' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

"அஜித் அப்படி கூறவில்லை": ' ' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர் முதல் நபராக வரிசையில் நின்று வாக்களித்த நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் மற்றும் அரசியல் குறித்துக் கருத்து கேட்டனர். அப்போது அவர் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து சென்றார்.


இருப்பினும், சமூக வலைதளங்களில் அவர் 'No Need' (தேவையில்லை) எனக் கூறியதாகவும், அதன் அர்த்தம் "ஆட்சி மாற்றம் தேவையில்லை" என்பது போலவும் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின. இந்த வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். நடிகர் அஜித் அரசியல் ரீதியான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தன் போன்றோர் வெளியிட்ட கருத்துகளும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்தவை என அஜித் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"